தமிழ் தாய் மடி பிறந்தோம்.
தரணி அளக்க பல திசை பிரிந்தோம்.
ஆழ் கடல் தாண்டி திரவியம் தேடினோம்.
திசை அறிந்து ஓடும் சிலர் ...அதை அறியாமல் ஓடும் பலர்..
உலகம் உருண்டை .ஒரு நாள் சந்திப்போம் ஓட்டம் தொடங்கிய தமிழ் தாய் மடியில்.
மலை உச்சியில் இருந்து உருண்டோடும் பாறைகள் நாம்.
உடைந்து சிதறி மண் ஆகும் முன் வந்தடைவோம் நம் மண்ணுக்கு.
அடுத்த பயிர் தளிர்த்து வளர உரமாவோம்.
புத்தாண்டு ..இது அடுத்த புது ஆண்டு..
காலம் நம்மை ஆளும் காலம் மாறி ..நாம் காலத்தை ஆள??
எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி பெற ..
மனமாற வாழ்த்தும் இவன்.....
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment