Wednesday, 23 December 2009

அம்மா!

ஆசை ,ஆசை! எழுதிட ஆசை!
உலகில் யாரும் எழுதா வரிகள்
உனை போற்றி எழுதிட ஆசை!
இறக்கும் முன் அவ்வரிகள் என்னுள்
பிறக்கத்தான் ஆசை!
கோடி முறை நான் பிறந்தாயினும்
அவ்வரிகளை வடித்திட ஆசை!

முதல் மனிதனாய் ,முதல் கவியாய்
பிறந்திருக்க ஆசை!
மொழி தோன்றும் முன் ,நான் தோன்றிருக்க ஆசை!

மாடாய்,ஆடாய் பிறந்திட ஆசை!
ஆயுள் முழுதும் உன்னை அழைத்திட ஆசை!

ஏழாம் அறிவை முதலில் எய்த ஆசை!
அவ்வறிவால் உன் புகழ் பாட ஆசை!

உனக்கு மகனாய் பிறக்க வரம் தந்தவன்
இன்னொரு முறை என் முன் தோன்ற ஆசை!

ஆசை ... ஆசை ...

Monday, 21 December 2009

நிலா !

கரு வானில் ஒரு
வெள்ளை திருழ்டி!

எங்கே என் 'மதி' ?

என் வானின் ஒரே மதி!
இன்று எவரோ ஒருவரின் திரு'மதி'யாய்!
நானோ அலைகிறேன் மதியிழந்தவனாய்! என் மதியவளை இழந்ததால்!